Trouble Shooter
குறை களைவோம்
நம் நாடு சுதந்திரமடைந்து 61 ஆண்டுகளாகியுள்ள இந்நாளில் அச்சுதந்திரத்தின் பலனை நாட்டு மக்கள் அனைவரும் அடைந்துள்ளனரா? மக்களால் மக்களுக்குக்காக மக்களாட்சி நடத்துவதாக சொல்லப்படும் மத்திய மாநில அரசுகள் உண்மையாகவே மக்களின் குறைகளை முன்னின்று தீர்த்துவைத்து மக்கள் நல்வாழ்வு வாழத் தேவையான அனைத்தினையும் செய்கின்றனவா?
பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை
பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை
என்று அந்நாளில் பாரதம் சுதந்திரமடைவதற்கு முன்னர் வெள்ளையர்களால் அவர்களது சுநலம் கருதி வளர்த்துவிடப்பட்ட தீண்டாமை உணர்வை ஒழிக்க வேண்டும் எனும் நோக்கத்தில் பாரதி பாடிய வரிகளின்படி இன்று தீண்டாமை ஒழிந்து மக்கள் அனைவரும் சரிநிகர் சமானமாக வாழ்கின்றனரா?
இவைபோன்ற பல கேள்விகள் நம் அனைவரின் மனதிலும் எழுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
நாட்டு மக்களின் குறைகளை நீக்க உதவும் நோக்கத்தில் புகார்ப்பெட்டி எனும் இப்பகுதி அமையும். வாசகர்கள் தாங்கள் காணும் இத்தகைய குறைகளை இங்கு பிரசுரிக்க புகார்களாக அனுப்பி வைக்கலாம். இப்புகார்களைப் பார்வையிடும் அரசு மற்றும் சேவை அமைப்புகளின் மூலம் தீர்வு கிடைக்க எங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வது எங்கள் நோக்கம்.
புகார்கள் - Complaints
அம்பத்தூர் நகராட்சியின் மேல் புகார்
பாதை தெரியவில்லை
கொலை செய்யும் மருத்துவர்கள்